Monday 30 March 2015

இனக்குழுக்கள்


ஆயர்கள் ஆதியில் இருந்தே பல குடிக்களாக இருந்து உள்ளனர் ஆயக்குடி ஆவின் குடி மேலும் பல இவர்கள் கண்ணன் வாழ்த்த காலத்திலே பல பிரிவுகளாக இருந்தனர் என்றும் அறிகிறோம். இவர்களின் குடி பெயர் பெரும்பாலும் தமிழ் மொழியின் மூலமாக அமைகிறது "ஆ" என்ற தமிழ் சொல்லே இவர்கள் அனைவருக்கும்  பொதுவாக குடியின் பெயர் அமைகிறது 





ஆ யர்

ஆ கிர் 


ஆ பீர் 


ஆ பிரர்

அதே போன்று "கோ" என்ற தமிழ் சொல்லும் இவர்கள் அனைவருக்கும் பொதுவாக குடியின் பெயர் அமைகிறது 

கோ ன்


கோ வலன் 


கோ பாலன் 


கோ பன்


கோ லா, 

கோ வலா(கொல்லா)


கோ பிக்குடி


கோ விந்தர் 

இவை அணைத்தும் பசுக்களை காப்பவர்கள் என்ற பொருளைத் தரும் ஒரு பொருட் பன்மொழிகள் ஆகும்.இன்றும் வட மாநிலங்களில் சில யாதவர்கள் ஆயர் என்ற பட்டதையும் குறிப்பாக குஜராத்தில் பெரும்பாலனோர் பயன்படுத்துகின்றனர் ... கோபன், கோவலா என்ற பட்டத்தை பெரும்பாலான மாநிலங்களில் பயன்படுத்துகின்றனர். கோனார் என்று ஒரிசா கொல்கத்தா, தமிழ்நாடு போன்ற பகுதியிலும் கோணருழு, வடுக இடையர், வடுக ஆயர் என்று ஆந்திராவிலும் பயன்படுத்துகின்றனர். கேரளாவில் இவர்களை கோல் ஆயர்,கோலாயர் என்றும் அழைக்கிறார்கள். ஆயர் என்று இந்தியா முழுவதும் பொதுப்படையாக அழைத்து கொள்கிறார்கள்.

கோவலா கோபாலா என்ற தமிழ் சொல்லின் மருஉ தான்   கோலா--->கொல்லா---.கவலா--->கௌடா 

இன்றும் கொல்லா என்ற வடுக ஆயர் மக்களும் மற்றும் கௌடா கௌண்டர் என்ற குறும்ப இடையரும் தம்மை கோவலா என்று அழைத்து கொள்கிறார்கள்


Letter “aa” exists as a word in Tamil (ஆ) to mean cattle –including cows and oxen. “Aa” was the term for cattle in popular use among ancient Tamils. How did this similarity happen between a Tamil word and Semitic languages?
But why it sounds “A” (ஆ), which is a word in Tamil for cattle?
From ‘Aa” the Tamil cattle rearing community got its name as “Ayar”.

This Tamil root word “Aa” is also seen in Sanskrit “Abhira”, the people who tended cattle.
This Tamil root word is there in Gujarati “Ahir” similar to Tamil Ayar who tends the cattle.
This Tamil root word is there in Aymara in the Andes region too!
The Ayars had existed by that name in pre-15th century BCE in the Indian Ocean habitat as we find a verse in Sangam literature saying that “Ayar” were an ancient community that co-existed with Pandyan Kings in the submerged lands. (5). They along with the Pandyan ling managed to survive the seas floods and entered the present day Tamilnadu.
The Ayars had existed in the Indian Ocean habitat prior to 15th century BCE when the last submergence happened in the Indian Ocean. This resulted in the dispersal of people in different directions – one such group being seafarer Tirayans had gone to Greece. It was within a short period of their settlement there, Zeus was born. Hearing the folklore type of narration of the previous Ayars from the society that is settled in Greece, he had come to the Tamil regions, seen “I rupa” – of the Ayar or cattle rearing community and taken her to Crete.
“Aa”, the name of cattle had gone there when her brother introduced letters to the society there. The knowledge of stars, Mesha (Kri-Kri) and Taar (Taurus) had gone there with these people. It was only after her entry in to Crete, that constellations were introduced – that too with many hiccups – as seen in Minotaur myths and Asterion myths all of which are vague and not based on clear concepts.
From “aa” the cattle, the “Ay” connection comes and is found throughout the Indian ocean and Pacific Ocean stretch and even crossing the Andes mountains. The presence of “Ay” and related to “Ida” having a meaning and relevance in Tamil brings in more rationale on a range of topics including why Crete came to have a mountain named as Ida! That would further substantiate the claim that Europa was a product of South and South East Asian community that spoke Tamil and followed Vedic culture.

யாதவர் என்பதின் சொல்லிலக்கணம்

இடையர்---> எடையர்--->எடயர்--->எட(வ்)வர்--->யாடவர்--->யாதவர்.
இடையவா--->எடயவா--->யாடவா(வ்)--->யாதவா

Iddya to Yedapadavu:
Some places along the Karavali have names that sound odd, if not meaningless! Iddya near Surathkal is one of such place-names. Hosabettu Viswanath opined that it represents ‘an elevated place’. Topographically, the Iddya, now part of Surathkal urban accretions, is an elevated plateau .But it is possible to relate the word Iddya to one of the ancient tribes of south India. The tribal angle also answers the origin of mysterious place names such as Yeda-padavu , Yeda-mangala etc.
Iddya

The place name Iddya has been cited in inscriptions dating back to Vijayanagar period as Yedeya. The stone inscription in the courtyard of the Kadire temple dated ca.1386 CE mentions place name Yedeya, along with Nambur (Panambur), Turithakal (Suratkal), Kollia (Kulai) and Chitrapura (Gururaja Bhat, 1974.).
Idaiyar, Idaivar

Tamil Sangam literature mentions tribes called Idaivar or Idaiyar. Descendants of these tribes do exist in different parts of peninsular India as can be verified from the list of castes and tribes. Apparently there are no representatives of Idaivar or Idaiyar community in present Tulunadu, even though the place name Iddya (pronounced as ‘yiDya’) or Iddeya near Surathkal provides mute evidence of the existence of Idaiya(r) tribes during the early centuries of the Common Era. These Iddaiya tribes might have been culturally assimilated in the Tulunadu with passage of time.Idaiyar of Tamilnadu are classified under Yadava or Golla communities
Ideya -Yediyur

The pronunciation of Iddya or Ideya as Yedeya during Kannada –Vijayanagar –period throws further light on similar sounding place names in Karnataka like Yediyur. The Idaiya tribes were apparently known as Yedia (pronounced yeDiya) in Kannada areas after whom places like Yediyur have been named. The word Yedia bears close resemblance to the community name Yadava.Idaiyars of Tamilnadu form part of Yadava group.Incidentally the present Chief Minister of Karnataka bears the name Yediyurappa.
Yedapadavu Yedamangala

There are some more villages where the original prefix in the name ‘Idaiya’ has been corrupted into Yeda- or Eda- during lingual evolution. Examples are: Yeda-padavu, Yeda-mangala, Yeda-mavinahole, Yeda-padi, Yeda-thadi etc. The surname ‘Yedapadithaya’ also can be cited.
The prefix ‘Yeda’ or ‘Eda’ in Kannada actually means ‘left side’ .But if you apply this Kannada meaning to the said villages and look for the corresponding ‘right side’ villages, there are none!
Therefore, ‘Yeda+padavu’ originally must have been meant ‘the plateau of Idaiya tribes’. And ‘Yeda+Mangala’ referred to ‘the war camping ground or fort of the Idaiya tribes’.
Edavolal

Edavolal town has been mentioned in inscriptions of Banavasi Kadamba period. Eda+volal must have been a colony of 'Ideya' or 'Edeya' people, the 'volal',being the equivalent of (p.>v. transition) 'polal',the town.
Similarly,the places like Yelandur (Mysore district) and Yelaniru/Yedaniru may have been associated with 'Yeda(v)' tribes.

http://tulu-research.blogspot.in/…/118-iddya-ideyar-tribes.…

யாதவர்கள் அகில இந்திய சாதியினரா?

குமரி முதல் இமயம் வரை உள்ள யாதவர்கள் அனைவரும் ஒருவரே.

யாதவர்கள் ஆதியில் இருந்தே பாரத தேசம் முழுவதும் பரவி வாழ்ந்தவர்கள் ஆவர். 

குமரி கண்டத்தில் பண்டியரோடு வாழ்ந்ததும் நாம் தான் அங்கு கடல் கோள் ஏற்பட்ட பொழுது பண்டியரோடு தப்பித்து தமிழகம் வந்ததும் நாம் தான் பண்டியரோடு உடன் பிறந்த குடியினர் தான் நல்லினத்து ஆயர்கள்...கலித்தொகையில் நல்லினத்து ஆயர்கள் பாண்டியர் குடியொடு உடன்பிறந்த குடி என்றும் குமரி கண்டத்தில் இருந்து தப்பித்து வந்தததாக கூறுகிறது

துவாரகையில் வாழ்ந்து அங்கு கடல் கோள் ஏற்பட்ட பொழுது அங்கு இருந்து சிந்து சமவெளி பகுதிக்கு வந்து அங்கு நாகரிகம் கண்டவர்களும் நாம் தான் அங்கு ஏறுதழுவல் நடத்தியதும் நாம் தான் அதற்கும் முன் அங்கு இருந்து அகத்திய முனிவருடன் தமிழகத்திற்கு வந்து இங்கு கடையெழு வள்ளல்கள் கொடுத்தும் நாம் தான் வேளிர்கள் துவாரகையில் இருந்து வந்ததாகவும் அவர்கள் கண்ணனின் மக்கள்  என்று புறநானூறு 201ம் பாடல் தெரிவிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள செய்தியினை படிக்கவும்.








ஆதாரம்: வரலாற்றில் யாதவர்கள், சி.பி. லோகநாதன். 












Wednesday 2 July 2014

தில்லையை எல்லை எங்கும் மணக்கச் செய்தவன் யாதவன்

சிதம்பரம் தில்லை நடராஜனுக்கு,தங்கத்தால்
கூரை அமைத்து தேவாரத் திருப்பதிகங்களைச் செப்பேடுகளில் எழுதி வைத்து, தில்லையை எல்லை எங்கும் மணக்கச் செய்தவன் ஒரு யாதவன் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

ஆனால் உண்மைதான். ஆம்! அந்த யாதவனின் உண்மைப் பெயர் மணவில் கூத்தன் காலிங்கராயன் என்பதாகும். 

தொண்டை மண்டலத்து 24 கோட்டைகளில் ஒன்றான மணவில் எனும் ஊரின் தலைவன் குலோத்துங்கனுடைய படைத்தலைவனாக இருந்து பாண்டிய நாடு, வேணாடு, மலைநாடு, முதலிய நாடுகளோடு போர் நடத்தி புகழ்பெற்றவன். 

இந்த யாதவனால் சோழ மன்னன்க்குப் பெரும் புகழ் உண்டாகியது. இவனுக்கு ‘காலிங்கராயன்’ என்னும் பெயர் சூட்டிச் சிறப்பித்தனர். பாண்டிய நாட்டில் இவன் வாழ்ந்த போது தான் தன் இனத்தைச் சேர்ந்த மாதரிக்கு இடைச்சி அம்மன் என்ற பெயரிலேயே மதுரையில் ஆலயம் அமைத்து கும்பாபிஷேகம் நடத்தினான் என்பது வரலாறு


(ஆதாரம்: ‘குமுதம்’ பக்தி ஸ்பெஷல்-தகவல் திசைமுத்து)


Friday 13 June 2014

ஆய் குல அரசன் கோகருந்தடக்கன்

ஆய் குல மன்னர்கள் பொதிகை மலை அருகே உள்ள ஆயக்குடியை தலைநகராய் கொண்டு ஆண்டு வந்தனர் இவர்கள் தம் பெயருக்கு முன்னால் அல்லது பின்னால் ஆய் என்ற பட்டதை கொண்டு உள்ளனர். இவர்கள் தங்களை ஆய் குலம் என்றும் யாதவ குலத்தினர் என்றும் செப்பேட்டில் கூறியுள்ளனர். இவர்கள் ஆயக்குடியை தலைநகராய் கொண்டு பல பகுதிகளை ஆண்டு உள்ளனர். இவர்களில் ஓர் அரசன் தான் கோகருந்தடக்கன்

ஆய் குல அரசன் கோகருந்தடக்கன் கி.பி 855ல் பாபநாசம்,திருநெல்வேலி,கழுகுமலை,கோயில்பட்டி,சங்கரன்கோவில்,நாகர்கோவில்,திருவனந்தபுரம் பகுதிகள் அக்காலத்தில் மலைநாடு என்று அழைக்கப்பட்டன. அப்பகுதியை ஆண்டு வந்துள்ளனர். இவன் மதுரையை ஆண்ட வரகுண பாண்டியனின் சமகாலத்தவன். 1904 ஆம் ஆண்டு கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோபிநாதராவ் என்பவர் முதன் முதலில் திருவிடைகோடு என்ற இடத்தில் கோகருந்தடக்கனை பற்றி சில கல்வெட்டுகளை பார்த்ததாக கூறியுள்ளார்.

இதன்பிறகு 1908 ஆம் ஆண்டு திருவாங்கூர் சமஸ்தானத்தின் செப்பேடுகளில் திரு.கோபிநாதராவ் படித்து பார்த்தபோது இதில் எல்லா தமிழ் செப்பேடுகளிலும் கோகருந்தடக்கன் என்ற பெயர் பொறிக்கபட்டிருந்தது கண்டு ஆச்சரியமுற்றுள்ளனர். இந்த செப்பேடுகள் மூலம் இவன் ஒரு ஆயர் குல அரசன் என்பதும் இவன் ஆட்சிகாலத்தில் செய்த சாதனைகளை பதிவு செய்துள்ளான்.

இதில் மீன்சிரை என்ற ஊரில் இருந்த உலக்குடிவில்லை என்ற பெயருடைய ஒரு நிலத்தை மீன்சிரை கிராம சபையிடமிருந்து கோகருந்தடக்கன் விலைக்கு வாங்கி அந்த நிலத்தின் நான்கு பக்கமும் பெண் யானையை நடக்கவிட்டு அளந்து கற்கள் நட்டு ஒரு விஷ்ணு கோவிலை நிர்மானித்தான் பின்பு அந்த பகுதிக்கு பார்த்திவ சேகரபுரம் என்று பெயரிட்டுள்ளான். செப்பேட்டின் இரண்டாவது இதழில், பார்த்திவ சேகரபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள விஷ்ணு கோவில் பூசாரிகள் கடமை பற்றியும், கோவிலுக்கு மலர்கள் தருபவர்களின் தினசரி வேலை பற்றியும் கோவிலில் அணையாவிளக்கு அமைத்து பராமரிப்பவர்களுக்கான கூலி பற்றியும் கூறப்பட்டுள்ளது.

மேலும் செப்பேட்டில்,கல்விச்சாலையில் மாணவர்கள் தங்கியிருந்து படிக்கும்போது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்றும் விஷ்ணு கோவிலை ஒட்டி 95 மாணவர்கள் தங்கி படிக்க ஒரு சாலையும் அமைத்து கொடுத்துள்ளார் என்றும், மாணவர்கள் பள்ளியில் தங்கும்போது மற்ற மாணவர்களை துன்புறுத்தக்கூடாது,மாணவர்கள் தங்கும் இடத்தில் ஆயுதங்கள் வைத்துக் கொள்ளலாம். ஆனால் பொது இடங்களுக்கு கொண்டுவரக்கூடாது. ஆயுதத்தால் சகமாணவர்கள் இம்சிக்ககூடாது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இச்செப்பேட்டின்படி வேதப்பள்ளி நடத்த அனுமதிக்கப்பட்ட உணவுச்சாலை பொழிசுழ் நாட்டைச்சேர்ந்த குரட்டுர் நாட்டிற்கு உட்பட்ட இடைக்குரட்டூர் கிராமத்தைச் சேர்ந்தது.இந்த பள்ளி ஒரு தர்மஸ்தாபனம். தர்ம ஸ்தாபனம் எந்த வகையில் நடைபெற வேண்டுமோ அந்த வகையில் நடைபெறுகிறதா எனமலைநாடு,சிங்கால் நாடு,முதலநாடு,படைப்பாநாடு மற்றும் வழுவா நாட்டு மக்கள் கண்காணிக்க அதிகாரம் வழங்கப்படுகிறது.

இதன் மூலம் மலை நாட்டை ஆண்ட ஆய் குல அரசர்களின் நியாயமான ஆட்சி முறை தெரிகின்றது. வாழ்க வளர்க! ஸ்ரீவல்லபன் என்று அழைக்கப்படும் இவ்வரசன் தனது புகழாலும், அன்பாலும் எதிரிகளை அழித்தவன், நந்தா அரசன் வழியிலும் யாதவ கு
லத்திலும் தோன்றியவன்.தனது தலைவன் கிருஷ்ண பரமாத்மா மீது நெருங்கிய பக்தி கொண்டவன்.

கீழே குறிப்பிட்ட ஆவணங்கள் ஆய்குல ஆட்சியில் ஆயக்குடி தலை நகராக இருந்ததையும். பின்னாளில் வாழ்ந்த ஆய்குல அரசி ஆய்குல மகாதேவி என்று குறிப்பிடப்பட்டுள்ளதையும் காணலாம்

215. The Trevandram Huzur office plates of Kokkaru-
nandadakkan- '.Tamil language and alphabet.) Records that on
14490871!! day of the Kali era, and fifteenth day of the ninth year
of king Karunandadakkan, he purchased from the Sabha of
Minchirai a plot of land, erected a Vishnu temple on it together
with a sdUi for 95 saftars (scholars) and endowed lands for temple
services, lamps, festivals, etc. The king must have ascended the
throne about A.D. 855-6. He belonged to the Yadava or Aykula
dynasty who ruled over the mountain tracts of South Travancore
who had Ayakudi for their capital and who were called the Lords
of the Podiya mountain. Mr. Gopinatha Rao traces the history of
the Ay king Andiran as far as it is ascertained from the Purand-
nuru. See Trav. Arch. Scr., Vol. I, p. 3. He also points out that
Karunandadakkan of these plates should be the same as Adakkan
or Sri Vallabha, the son of Karunandan and grandson of Sadayan,
and contemporary of Varaguna Pandya, who came to the throne in

216. The Huzur office plate of Vikramaditya Varaguna.
(Tamil.) The record belongs to the eighth year of king Vikrama-
ditya Varaguna and says that while staying at Tirunandikarai he
married Murugan Sendi or Aykula Mahadevi, the daughter of
Teriganadu Kilavan, and granted some lands for her enjoyment.
Mr. T. A. Gopinatha Rao gives arguments to show that this king
was the successor of Kokkarunandadakka referred to in the
previous inscription. See Trav. Arch. Ser., Vol. I, No. II. 


ஆதாரம்:

http://www.ebooksread.com/authors-eng/v-vijayaraghava-rangacharya/a-topographical-list-of-the-inscriptions-of-the-madras-presidency-collected-til-ala/page-28-a-topographical-list-of-the-inscriptions-of-the-madras-presidency-collected-til-ala.shtml

கோச்சடையான் ரணதீரன்

நண்பர்களே , சமீபகாலமாகவே சினிமாத்துறையிலும் , ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி கொண்டிருக்கும் திரைப்படம் கோச்சடையான் ! சரி திரைப்படம் ஒரு புறம் இருக்கட்டும் , யார் இந்த கோச்சடையான் ? ஆவல் கொண்டு தேடியதில் எனக்கு கிடைத்த சில தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன் . எனது பதிவில் கூறவிருக்கும் தகவளோடு உங்களுக்கு மாற்றுகருத்து இருப்பினும் தெரியபடுத்தலாம்.. சரி வாருங்கள் கோச்சடையானை பற்றி காண்போம் ....

கோச்சடையான் பாண்டிய மன்னர்களுள் ஓர் தலைச்சிறந்த மாவீரன் ஆவார் , இவர் திபி 7 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர், வீரத்திற்கு பெயர் பெற்றவர். இவர் திபி 670 முதல் திபி 710 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்தார்.

தனது தந்தையின் மறைவிற்கு பிறகு அரியணையில் அமர்ந்தார் , இவர் பொறுப்பேற்கும் போது பாண்டிய நாடு சற்று சிறப்பற்றே இருந்தது , அதன் பின்னேர் இவர் மேற்கொண்ட போர்களினாலும் வெற்றிகளினாலும் பாண்டியநாடு முன் எப்போதும் இல்லா அளவிற்கு பெரும் புகழும் பெற்றது , ராஜிய எல்லைகளும் விரிவடைந்தது. மேலும் கோச்சடையன் ரணதீரன் தனது நாட்டை விரிவுபடுத்த எண்ணி வடக்கில் உள்ள மாளவ நாட்டை நோக்கிப் படையெடுத்தான். இப்போரிலும் வெற்றி பெற்றான். பின்னர் மாளவநாட்டு மன்னரின் மகளை மணந்து கொண்டான்.


அப்போது சேர நாடும் கோச்சடையான் ஆளுகை கீழ் இருந்தது ,சேர நாட்டில் ஏற்பட்ட கிளர்ச்சியை அடக்க படையுடன் கோச்சடையான் சென்றிருந்த வேளையில் சாளுக்கிய மன்னன் விக்கிரமாத்தன் தமிழகத்தின் மீது படை எடுத்து வந்திருந்தார், வரும் வழியில் பல்லவர்களை ஒரு கை பார்த்து விட்டு, அப்படியே மதுரைக்கும் வந்தார். பெரும் படையும் சேர நாட்டில் பிரவேசித்தார், எனவே மதுரைக்கோட்டை வாசலை அடைத்து விட்டு உள்ளிருந்து கோட்டையைப்பாதுகாக்க துவங்கினார்கள். அப்பொழுது பாண்டிய அரசி கோட்டையில் இருந்தார் அவரே களம் இறங்கி வீரர்களை ஊக்கப்படுத்தி வழி நடத்தி கோட்டையை காவல் காக்க செய்தார் எனவும் தகவல் உண்டு.

பெரும் படையுடன் வந்திருந்த விக்கிரமாதித்தன் பல நாட்கள் முற்றுகையிட்டு உள் நுழைய போராடியும் கோட்டைக்காவலர்கள் சுற்று சுவரில் அரணாக நின்று உள் நுழையும் முயற்சிகளை எல்லாம் முறியடித்தார்கள். நாட்கள் செல்லவே விரக்தியடைந்த விக்கிரமாதித்தன் மதுரை வீழ்ந்தது என அவராகவே வெற்றியை அறிவித்துக்கொண்டு மதுரைக்கு அந்த பக்கம் இருக்கும் குறு நில மன்னர்களையும் அடக்கி மொத்த தமிழகத்தையும் கைப்பற்ற மேற்கொண்டு முன்னேறி திருநெல்வேலி வரை முன்னேறி சென்று முகாமிட்டார்.

இதற்கிடையே தகவல் கிடைத்த கோச்சடையான் கடுங்கோவத்துடன் பெரும்படையுடன் பாண்டிய நாடு திரும்பி, நேராக நெல்லைக்கு சென்று அங்கே வைத்தே விக்கிரமாதித்தனுடன் மோதினார் கடும் போரில் கோச்சடையானுக்கே வெற்றி கிட்டியது. தப்பித்தால் போதும் என பின் வாங்கி ஓடி வந்த விக்கிரமாதித்தனை காவிரி கரை வரைக்கும் கோச்சடையான் விரட்டி வந்தார்.

விக்கிரமாதித்தன் போரில் கிடைக்கும் விழுப்புண்களை பெருமையாக நினைப்பவர் என்பதால் அவருக்கு ரணரசிகா என்று பட்டப்பெயர் உண்டு.எனவே விக்கிரமாதித்தனை வென்றதால் ரணதீரன் கோச்சடையான் என பாண்டிய மன்னன் பெயர்ப்பெற்றான்.

அதன் பின்னர்க் கங்கருடன் போர்புரிந்து வென்று, அவர்ளைக் கப்பம் கட்டச் சொல்லி, கங்க மன்னரது மகளான பூசுந்தரியை மணம் செய்து கொண்டான்.

இம்மன்னனுக்கு ரணதீரன் கோச்சடையன், செங்கோல் தென்னன், வானவன், செம்யன், மதுரகருநாடகன், கொங்கர்கோமான், மன்னர் மன்னன் போன்ற பல பட்டப் பெயர்களைக் கொண்டிருந். இதற்குச் சான்றாக வேள்விக்குடிச் செப்பேடு இருப்பது குறிப்பிடத்தக்கது.




இவர் தன்னை சந்திர வம்ச யாதவ குலம் எனவும் தனது தானப் பட்டயத்தில் குறிப்பிட்டுள்ளார் ...

முதலாம் இராசசிம்மன், தேர்மாறன் என்னும் வேறு பெயர்களும் உண்டு. இவன் சிறந்த சிவ பக்தனாகவும் விளங்கினான்.

ஆயர் குல வள்ளல் பேகன்


 பேகன் கடையெழு வள்ளல்களுள் ஒருவர்:
 
 

வேள் - பேகன்.

இவன், மேலே தனியாகக் குறித்த ஆவியின் குடியில் உதித்த பெருந்தகையாவன் (ஆ+இனம்+குடி =>ஆவினன் குடி =>ஆயர் குடி ); இவனை வையாவிக்கோப் பெரும்பேகன் எனவும் வழங்குவர். கடைச்சங்கநாளில் விளங்கிய கடையெழுவள்ளல்களில் இவனும் ஒருவன் என்பது "முரசுகடிப்பிகுப்பவும்" என்னும் புறப்ப பாட்டாலும்(158) சிறுபாணாற்றுப் படையில் 84- முதல் 122-வரையுள்ள அடிகளாலும் விளங்கும். இவனது வரையா வள்ளன்மையைப் பரணர் என்னும் பழையபுலவர் புகழுமிடத்து--" குளத்திலும் வயலிலும் களர்நிலத்தும் ஒப்பப்பெய்யும் வரையறையில்லாத மாரிபோலப், பேகனும் கொடையிடத்துத் தான் அறியாமைப் படுவதல்லது, பிறர் படைவந்து பொரும்போது அப்படையிடத்துத் தான் அறியாமைப்படான்"--என்ற கருத்துப்பட,

" அறுகுளத் துகுத்தும் அகல்வயற் பொழிந்தும்
  உறுமிடத் துதவா துவர்நில மூட்டியும்
  வரையா மரபின் மாரி போலக்
  கடாஅ யானைக் கழற்காற் பேகன்
  கொடைமடம் படுத லல்லது
  படைமடம் படாஅன்பிறர் படைமயக் குறினே"

என அவனது கொடைமடத்தைச் சிறப்பிப்பர். இவனது கொடை மடத்தைப்பற்றிய மற்றொரு செய்தியுமுண்டு; இவ்வள்ளல் ஒருகால் மலைவழியே செல்லும்போது மயிலொன்று தன் சிறகை விரித்து ஆடுவது கண்டு, ' அது குளிருக்காற்றாது வருந்தி நடுங்குகின்றது போலும்' என்று கருதித் தான் மேற்போர்த்திருந்த உயர்ந்த படாத்தை அதன்மேற் சார்த்திச் சென்றான்-- என்பதாம்.இச்செய்தி--

" உடாஅ போரா ஆகுத லறிந்தும்
  படாஅ மஞ்ஞைக் கீத்த எங்கோ
  கடாஅ யானைக் கலிமான் பேக!"

எனப் பரணரும் (புறம்-141)