Friday 13 June 2014

ஆய் குல அரசன் கோகருந்தடக்கன்

ஆய் குல மன்னர்கள் பொதிகை மலை அருகே உள்ள ஆயக்குடியை தலைநகராய் கொண்டு ஆண்டு வந்தனர் இவர்கள் தம் பெயருக்கு முன்னால் அல்லது பின்னால் ஆய் என்ற பட்டதை கொண்டு உள்ளனர். இவர்கள் தங்களை ஆய் குலம் என்றும் யாதவ குலத்தினர் என்றும் செப்பேட்டில் கூறியுள்ளனர். இவர்கள் ஆயக்குடியை தலைநகராய் கொண்டு பல பகுதிகளை ஆண்டு உள்ளனர். இவர்களில் ஓர் அரசன் தான் கோகருந்தடக்கன்

ஆய் குல அரசன் கோகருந்தடக்கன் கி.பி 855ல் பாபநாசம்,திருநெல்வேலி,கழுகுமலை,கோயில்பட்டி,சங்கரன்கோவில்,நாகர்கோவில்,திருவனந்தபுரம் பகுதிகள் அக்காலத்தில் மலைநாடு என்று அழைக்கப்பட்டன. அப்பகுதியை ஆண்டு வந்துள்ளனர். இவன் மதுரையை ஆண்ட வரகுண பாண்டியனின் சமகாலத்தவன். 1904 ஆம் ஆண்டு கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோபிநாதராவ் என்பவர் முதன் முதலில் திருவிடைகோடு என்ற இடத்தில் கோகருந்தடக்கனை பற்றி சில கல்வெட்டுகளை பார்த்ததாக கூறியுள்ளார்.

இதன்பிறகு 1908 ஆம் ஆண்டு திருவாங்கூர் சமஸ்தானத்தின் செப்பேடுகளில் திரு.கோபிநாதராவ் படித்து பார்த்தபோது இதில் எல்லா தமிழ் செப்பேடுகளிலும் கோகருந்தடக்கன் என்ற பெயர் பொறிக்கபட்டிருந்தது கண்டு ஆச்சரியமுற்றுள்ளனர். இந்த செப்பேடுகள் மூலம் இவன் ஒரு ஆயர் குல அரசன் என்பதும் இவன் ஆட்சிகாலத்தில் செய்த சாதனைகளை பதிவு செய்துள்ளான்.

இதில் மீன்சிரை என்ற ஊரில் இருந்த உலக்குடிவில்லை என்ற பெயருடைய ஒரு நிலத்தை மீன்சிரை கிராம சபையிடமிருந்து கோகருந்தடக்கன் விலைக்கு வாங்கி அந்த நிலத்தின் நான்கு பக்கமும் பெண் யானையை நடக்கவிட்டு அளந்து கற்கள் நட்டு ஒரு விஷ்ணு கோவிலை நிர்மானித்தான் பின்பு அந்த பகுதிக்கு பார்த்திவ சேகரபுரம் என்று பெயரிட்டுள்ளான். செப்பேட்டின் இரண்டாவது இதழில், பார்த்திவ சேகரபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள விஷ்ணு கோவில் பூசாரிகள் கடமை பற்றியும், கோவிலுக்கு மலர்கள் தருபவர்களின் தினசரி வேலை பற்றியும் கோவிலில் அணையாவிளக்கு அமைத்து பராமரிப்பவர்களுக்கான கூலி பற்றியும் கூறப்பட்டுள்ளது.

மேலும் செப்பேட்டில்,கல்விச்சாலையில் மாணவர்கள் தங்கியிருந்து படிக்கும்போது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்றும் விஷ்ணு கோவிலை ஒட்டி 95 மாணவர்கள் தங்கி படிக்க ஒரு சாலையும் அமைத்து கொடுத்துள்ளார் என்றும், மாணவர்கள் பள்ளியில் தங்கும்போது மற்ற மாணவர்களை துன்புறுத்தக்கூடாது,மாணவர்கள் தங்கும் இடத்தில் ஆயுதங்கள் வைத்துக் கொள்ளலாம். ஆனால் பொது இடங்களுக்கு கொண்டுவரக்கூடாது. ஆயுதத்தால் சகமாணவர்கள் இம்சிக்ககூடாது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இச்செப்பேட்டின்படி வேதப்பள்ளி நடத்த அனுமதிக்கப்பட்ட உணவுச்சாலை பொழிசுழ் நாட்டைச்சேர்ந்த குரட்டுர் நாட்டிற்கு உட்பட்ட இடைக்குரட்டூர் கிராமத்தைச் சேர்ந்தது.இந்த பள்ளி ஒரு தர்மஸ்தாபனம். தர்ம ஸ்தாபனம் எந்த வகையில் நடைபெற வேண்டுமோ அந்த வகையில் நடைபெறுகிறதா எனமலைநாடு,சிங்கால் நாடு,முதலநாடு,படைப்பாநாடு மற்றும் வழுவா நாட்டு மக்கள் கண்காணிக்க அதிகாரம் வழங்கப்படுகிறது.

இதன் மூலம் மலை நாட்டை ஆண்ட ஆய் குல அரசர்களின் நியாயமான ஆட்சி முறை தெரிகின்றது. வாழ்க வளர்க! ஸ்ரீவல்லபன் என்று அழைக்கப்படும் இவ்வரசன் தனது புகழாலும், அன்பாலும் எதிரிகளை அழித்தவன், நந்தா அரசன் வழியிலும் யாதவ கு
லத்திலும் தோன்றியவன்.தனது தலைவன் கிருஷ்ண பரமாத்மா மீது நெருங்கிய பக்தி கொண்டவன்.

கீழே குறிப்பிட்ட ஆவணங்கள் ஆய்குல ஆட்சியில் ஆயக்குடி தலை நகராக இருந்ததையும். பின்னாளில் வாழ்ந்த ஆய்குல அரசி ஆய்குல மகாதேவி என்று குறிப்பிடப்பட்டுள்ளதையும் காணலாம்

215. The Trevandram Huzur office plates of Kokkaru-
nandadakkan- '.Tamil language and alphabet.) Records that on
14490871!! day of the Kali era, and fifteenth day of the ninth year
of king Karunandadakkan, he purchased from the Sabha of
Minchirai a plot of land, erected a Vishnu temple on it together
with a sdUi for 95 saftars (scholars) and endowed lands for temple
services, lamps, festivals, etc. The king must have ascended the
throne about A.D. 855-6. He belonged to the Yadava or Aykula
dynasty who ruled over the mountain tracts of South Travancore
who had Ayakudi for their capital and who were called the Lords
of the Podiya mountain. Mr. Gopinatha Rao traces the history of
the Ay king Andiran as far as it is ascertained from the Purand-
nuru. See Trav. Arch. Scr., Vol. I, p. 3. He also points out that
Karunandadakkan of these plates should be the same as Adakkan
or Sri Vallabha, the son of Karunandan and grandson of Sadayan,
and contemporary of Varaguna Pandya, who came to the throne in

216. The Huzur office plate of Vikramaditya Varaguna.
(Tamil.) The record belongs to the eighth year of king Vikrama-
ditya Varaguna and says that while staying at Tirunandikarai he
married Murugan Sendi or Aykula Mahadevi, the daughter of
Teriganadu Kilavan, and granted some lands for her enjoyment.
Mr. T. A. Gopinatha Rao gives arguments to show that this king
was the successor of Kokkarunandadakka referred to in the
previous inscription. See Trav. Arch. Ser., Vol. I, No. II. 


ஆதாரம்:

http://www.ebooksread.com/authors-eng/v-vijayaraghava-rangacharya/a-topographical-list-of-the-inscriptions-of-the-madras-presidency-collected-til-ala/page-28-a-topographical-list-of-the-inscriptions-of-the-madras-presidency-collected-til-ala.shtml

No comments:

Post a Comment