Saturday 1 March 2014

தொண்டைமான்கள் யார்?


தொண்டைமண்டலத்தை  24 கோட்டங்களாகப் பிரித்து குறும்ப இடையர் என்ற யாதவ  மரபினரே ஆண்டு வந்தார்கள் இவர்களே பல்லவர் எனப்பட்டனர். பிற்காலத்தில்  வலிமை குன்றி இராமநாதபுரத்துக்கு கட்டுப்பட்டு  புதுகோட்டையை ஆண்டு வந்தனர்

கி.பி. 1671-1710 முதல் இராமநாதபுரத்தை ஆண்ட கிழவன் சேதுபதி அதுசமயம்  புதுகோட்டை மன்னராக  இருந்த பல்லவராயன் என்பவரை நீக்கிவிட்டு, அதற்க்குப் பதில் தனது ஆசை நாயகியான கள்ளர் இனது நங்கை காத் ஆய் என்பவளின் சகோதரர் ரகுநாதன் என்பவனை புதுகோட்டை மன்னராக்கினார். இவரே தொண்டைமான் என்ற பட்டத்தை சூட்டிக்கொண்டார். எனவே ஆதியில் புதுகோட்டை தொண்டைமான்கள் யாதவர்கள் என்பது தெளிவாகிறது.

NOTE: 

In ancient times a nomadic shepard class abandoned it's wanderings and settled around kanchi and it's neighbourhood, destroyed the forests, converted them into fertile lands, made many adminstrative divisions or kottam's. from this sheppard class or kurumbas emerged great pallavas 

-Views of elliot sevol 

ஆராய்ச்சியாளராகிய எலியட் செவேல் முதலியோர் 'தொண்டைமண்டலத்துப் பழங்குடியினரான குறும்பர் மரபினரே பிற்காலப் பல்லவர்' என்றும் முடிவு செய்தனர். குறும்பர் ஆடுமாடுகளை மேய்ப்பவர். இதனைக் கருத்திற் கொண்டு. பால்-அவர் (பால் கறப்பவர் - குறும்பர்) என்பதே பல்லவர் எனத் திரிந்திருக்கலாம் என முடிவு செய்தவரும் சிலராவர்.

மணிமேகலையில் கூறப்படும் ஆதொண்டச்சக்கரவர்த்தி குறும்பரை வென்று அவர் தம் குறும்பர் பூமியைத் தனதாக்கி தன் பெயர் இட்டு தொண்டைமண்டலம் என வழங்கினான்' என்பது செவிவழி வரும் செய்தியாகும். இது முன்னரே கூறப்பட்டது

யாதவர்களுக்கு குறும்பொறை நாடன்  என்ற பட்டமும் உள்ளது. குறும்பு என்றால் காடு என்று பொருள். காடும் காடு சார்ந்த பகுதில் வாழ்ந்த முல்லை நில மக்களான குறும்ப இடையர் பிற்காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை வழியாக  ஆந்திரா கர்நாடக போன்ற பகுதிக்கு சென்று வாழ்ந்தனர்.

நன்றி
சுபாஷ் சேர்வை யாதவ்

No comments:

Post a Comment